நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பைத் துவக்கி உள்ளனர்.
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கிய நிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் எஸ்டிபிஐ ஈடுப்பட்டுள்ளனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பு பணிகளைத் துவக்கி உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகக் கோவை மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் வாக்கு சேகரிப்பைத் துவக்கி உள்ளனர்.
எஸ்டிபிஐ கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 82 வது வார்டு வேட்பாளர் ரஷீதா பேகம் இன்று வாக்கு சேகரிப்பைத் துவங்கினார். அவர் போட்டியிடும் வார்டில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளைச் சேகரித்தார். அவருக்குப் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கடந்த முறையும் அந்த வார்டில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முஹம்மது சலீம் வெற்றி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை அப்பகுதிக்குச் செய்துள்ள நிலையில், இம்முறையும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நிற்பது அக்கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.