திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சி..!

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா. கணவரைப் பிரிந்து விவாகரத்தானவர். தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக பழனி குமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்து, அவரை விட்டு விலகிய நிலையில் பழனிகுமார் தொடர்ந்து தன்னை மிரட்டி ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, சுதாவை மிரட்டி வருவதாகவும் இதனை மறுத்ததால் அவரை முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.



இதனால் மனமுடைந்த சுதா இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்குத்தானே மண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.



இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சுதா மற்றும் பழனி குமாரிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...