பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஆசைக்கு இணங்க வலியுறுத்தி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதா. கணவரைப் பிரிந்து விவாகரத்தானவர். தற்போது இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பாரத் முன்னணியில் பொதுச்செயலாளராக இருப்பதாக பழனி குமார் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். சில நாட்களில் அவரின் சுயரூபம் தெரிந்து, அவரை விட்டு விலகிய நிலையில் பழனிகுமார் தொடர்ந்து தன்னை மிரட்டி ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, சுதாவை மிரட்டி வருவதாகவும் இதனை மறுத்ததால் அவரை முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுதா இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்குத்தானே மண்ணை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சுதா மற்றும் பழனி குமாரிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.