வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறை அருகே புலி சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் வனப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, கரடி மான் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் சிறுத்தை, யானைகளை குடியிருப்பு பகுதியில் நடமாட்டத்தை பொது மக்கள் பார்க்க முடிகிறது. புலியை மட்டும் சாதாரணமாக பார்க்க முடியாது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஒரு காரில் வந்துள்ளனர். காலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் கவர்கள் என்ற இடத்தில் சாலை ஓரம் புலி நடந்து சென்று உள்ளது. இதை பார்த்த ஒருவர் தனது செல் ஃபோனில் வீடியோ எடுத்து உள்ளார்.

புலி சாலையை கடந்து வனப் பகுதிக்குள் தாவிச் சென்று உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் வனப் பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டு எருமை, கரடி மான் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் சிறுத்தை, யானைகளை குடியிருப்பு பகுதியில் நடமாட்டத்தை பொது மக்கள் பார்க்க முடிகிறது. புலியை மட்டும் சாதாரணமாக பார்க்க முடியாது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஒரு காரில் வந்துள்ளனர். காலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் கவர்கள் என்ற இடத்தில் சாலை ஓரம் புலி நடந்து சென்று உள்ளது. இதை பார்த்த ஒருவர் தனது செல் ஃபோனில் வீடியோ எடுத்து உள்ளார்.
புலி சாலையை கடந்து வனப் பகுதிக்குள் தாவிச் சென்று உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வால்பாறை வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது வன ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.