தேர்தல் விதிமுறைகள் காரணம்காட்டி, காந்தியடிகளை கொலை செய்தவர்கள் குறித்து பேசவும், உறுதி மொழி ஏற்க கோவை காவல்துறையினர் மறுப்பு...!

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் "இந்து" மதவெறியர்களால் கொல்லப்பட்ட என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதனை காவல்துறையினர் அகற்றும்படி தெரிவித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், கட்சி மற்றும் அமைப்புகள் பெயர்கள் பேனரில் வைக்க அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் தேச தந்தை என்று போற்றப்படும் காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.



அப்போது உறுதிமொழியை ஏற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், உறுதிமொழி ஏற்க காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் 'இந்து' மதவெறியர்களால் கொல்லப்பட்ட என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதனை காவல்துறையினர் அகற்றும்படி தெரிவித்தனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், கட்சி மற்றும் அமைப்புகள் பெயர்கள் பேனரில் வைக்க அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.



அதனைத் தொடர்ந்து, 'இந்து' என்ற வார்த்தை மட்டும் மறைக்கப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. அவ்வாறு, உறுதிமொழி ஏற்கும் போது 'ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் காந்தியடிகள் கொல்லப்பட்டார்' என்று தெரிவித்தனர். அவ்வாறு, கூறக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்தனர்.

இதனால், மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், மிகுந்த சர்ச்சைக்கு பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடத்தப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,மதசார்பின்மையை காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

72 ஆண்டுகளாக காந்தியடிகளின் பாடல்கள் இசைத்து வந்த நிலையில், இம்முறை அதற்கு அனுமதி மறுத்ததாக தெரிவித்தார். மேலும், நாங்கள் எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை எனவும் நடந்ததை தான் கூறியதாகவும் தெரிவித்தார்.காந்தி அடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேவை சிலர் புகழ்வது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...