கோவையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

திருப்பூர் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு பயத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை.


கோவை: கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவரது மகன் கார்த்திக் குமார் வயது 21, கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கார்த்திக் குமார் நண்பர்களிடம் இரண்டாம் ஆண்டு பாட புத்தகம் படிப்பதற்கு சிரமமாக உள்ளது என கூறி வந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் அவரை தேற்றி சமாதானம் செய்து வந்த போதிலும், கார்த்திக் குமார் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அவரது செல்போனுக்கு அழைத்து பார்த்தனர். பின்னர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கார்த்திக் குமார் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...