நகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு பள்ளியில் ஆய்வு செய்த போது, பூட்டிய நிலையில் இருந்த சத்துணவு மையத்தில் குட்டி யானையின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.
கோவை: வால்பாறை அருகே கைவிடப்பட்ட பள்ளி சத்துணவு மையத்தில் மக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட குட்டி யானையின் உடலை வனத்துறையினர் ஆய்வு செய்து எரித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று முதல் நகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலகர் தேர்தல் மையத்தை பார்வையிட சென்றனர்.
அப்போது, வால்பாறை அருகே ஹஃபோரஸ்ட் எஸ்டேட் துவக்க பள்ளியில் ஆய்வு செய்த போது, பூட்டிய நிலையில் இருந்த சத்துணவு மையத்தை திறந்து பார்த்தனர். அங்கு துர்நாற்றம் வீசிய நிலையில், இறந்து பல நாட்கள் ஆன குட்டி யானையின் உடல் இருந்தது.
இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்து மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் கல இயக்குனர் மற்றும் வனத்துறை மருத்துவர் முன்னிலையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு, விசாரணை செய்தனர்.
அதில், சத்துணவு மையத்தில் யானை கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளது திரும்பி வரும் வருவதற்கு முடியாமல் கட்டிடத்திற்கு உள்ளே மாட்டிக் கொண்டால், யானை போராடி வெளியே வர முடியாமல் இறந்து உள்ளதாகவும் யானைக்கு சுமார் ஆறிலிருந்து எட்டு வயது இருக்கும் என்றும் பிறந்தது ஆண் யானை என்பதும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, யானையின் உடலை ஆய்வு செய்த வனத்துறையினர் உடலை தீ வைத்து எரித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று முதல் நகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலகர் தேர்தல் மையத்தை பார்வையிட சென்றனர்.
அப்போது, வால்பாறை அருகே ஹஃபோரஸ்ட் எஸ்டேட் துவக்க பள்ளியில் ஆய்வு செய்த போது, பூட்டிய நிலையில் இருந்த சத்துணவு மையத்தை திறந்து பார்த்தனர். அங்கு துர்நாற்றம் வீசிய நிலையில், இறந்து பல நாட்கள் ஆன குட்டி யானையின் உடல் இருந்தது.
இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்து மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் கல இயக்குனர் மற்றும் வனத்துறை மருத்துவர் முன்னிலையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு, விசாரணை செய்தனர்.
அதில், சத்துணவு மையத்தில் யானை கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளது திரும்பி வரும் வருவதற்கு முடியாமல் கட்டிடத்திற்கு உள்ளே மாட்டிக் கொண்டால், யானை போராடி வெளியே வர முடியாமல் இறந்து உள்ளதாகவும் யானைக்கு சுமார் ஆறிலிருந்து எட்டு வயது இருக்கும் என்றும் பிறந்தது ஆண் யானை என்பதும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, யானையின் உடலை ஆய்வு செய்த வனத்துறையினர் உடலை தீ வைத்து எரித்தனர்.