உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையால் 17,50,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கதக்கத்துல்லா என்பவரின் காரை சோதனை செய்த போது அதில் ரூ.17.5 லட்சம் பணம் இருந்தது.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சாட்சிகளாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதர் ஜெய்தின் மற்றும் அப்துல் காதர் இருந்தனர். மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா அவர்கள் முன்னிலையில் கைபற்றிய பணத்தை பறக்கும் படை அதிகாரி ஒப்படைத்தனர்.
இது குறித்து கதக்கத்துல்லா என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறியதாவது:-
பறக்கும் படை கைபற்றிய பணமானது, நான் இடம் வாங்குவதற்காக எடுத்து வந்த பணம் என்றும் கூடிய விரைவில் உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறினார்.
கோவை ராமநாதபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கதக்கத்துல்லா என்பவரின் காரை சோதனை செய்த போது அதில் ரூ.17.5 லட்சம் பணம் இருந்தது.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சாட்சிகளாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதர் ஜெய்தின் மற்றும் அப்துல் காதர் இருந்தனர். மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா அவர்கள் முன்னிலையில் கைபற்றிய பணத்தை பறக்கும் படை அதிகாரி ஒப்படைத்தனர்.
இது குறித்து கதக்கத்துல்லா என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறியதாவது:-
பறக்கும் படை கைபற்றிய பணமானது, நான் இடம் வாங்குவதற்காக எடுத்து வந்த பணம் என்றும் கூடிய விரைவில் உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறினார்.