கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.17.5 லட்சம் பணம் பறிமுதல்..!

உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையால் 17,50,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கதக்கத்துல்லா என்பவரின் காரை சோதனை செய்த போது அதில் ரூ.17.5 லட்சம் பணம் இருந்தது.

இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சாட்சிகளாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதர் ஜெய்தின் மற்றும் அப்துல் காதர் இருந்தனர். மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா அவர்கள் முன்னிலையில் கைபற்றிய பணத்தை பறக்கும் படை அதிகாரி ஒப்படைத்தனர்.

இது குறித்து கதக்கத்துல்லா என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறியதாவது:-

பறக்கும் படை கைபற்றிய பணமானது, நான் இடம் வாங்குவதற்காக எடுத்து வந்த பணம் என்றும் கூடிய விரைவில் உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...