குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனைமலை முக்கோணம் பகுதியில் தஞ்சம் அடைந்து இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், சங்கீதா ஆகியோரின் 5 மாத குழந்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் தேதி மர்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டது.
இதையடுத்து, ஆனைமலை போலீசார் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் இருபத்தி ஒன்பதாம் தேதி இரவு அங்கலக்குறிச்சி பகுதியில் வைத்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராமர்(45) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆனைமலை முக்கோணம் பகுதியில் தஞ்சம் அடைந்து இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், சங்கீதா ஆகியோரின் 5 மாத குழந்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் தேதி மர்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டது.
இதையடுத்து, ஆனைமலை போலீசார் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் இருபத்தி ஒன்பதாம் தேதி இரவு அங்கலக்குறிச்சி பகுதியில் வைத்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராமர்(45) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.