பொள்ளாச்சி அருகே குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனைமலை முக்கோணம் பகுதியில் தஞ்சம் அடைந்து இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன், சங்கீதா ஆகியோரின் 5 மாத குழந்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி ஏழாம் தேதி மர்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டது.

இதையடுத்து, ஆனைமலை போலீசார் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் இருபத்தி ஒன்பதாம் தேதி இரவு அங்கலக்குறிச்சி பகுதியில் வைத்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராமர்(45) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராமர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...