மாநகராட்சி இணையத்திலிருந்து முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் படங்கள் நீக்கம்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி இணைய தளத்திலிருந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது புகைப்படங்கள் நீக்கப்பட்டன.


கோவை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி இணைய தளத்திலிருந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரது புகைப்படங்கள் நீக்கப்பட்டன.

தமிழகத்தில் பிப்., 19-ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சுவர் விளம்பரங்கள் அழிப்பது, போஸ்டர்கள் கிழிப்பது உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன. வேட்பு மனுக்கள் இன்று முதல் பெறப்படுகின்றன. மாநகராட்சி இணைய தளத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரது படங்களும், கோவையில் துவக்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகளில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

அப்படங்கள் அனைத்தும் இணைய தளத்திலிருந்து நேற்று நீக்கப்பட்டன. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக இருந்தாலும், தி.மு.க., கட்சி தலைவராக இருப்பதால், அவரது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில் இருக்கும் புகைப்படங்களையும் அகற்ற அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் திட்ட பணிகள் தொடர்பாக, கமிஷனர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு செய்தது தொடர்பான செய்திகள், புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அவையும் இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...