மாதம்பட்டியில் 16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோவை: மாதம்பட்டியில் 16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). இவர் பழக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் வீடு பொள்ளாச்சி ஆனைமலை உள்ளதால் அவ்வப்போது ஆனை மலைக்கு வந்து செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு தினேஷ்குமார் வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16-வயது சிறுமிக்கும், தினேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆனைமலை காவல்துறை விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் பேரில் காவல்துறை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர்.
கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). இவர் பழக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் வீடு பொள்ளாச்சி ஆனைமலை உள்ளதால் அவ்வப்போது ஆனை மலைக்கு வந்து செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு தினேஷ்குமார் வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16-வயது சிறுமிக்கும், தினேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆனைமலை காவல்துறை விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் பேரில் காவல்துறை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர்.