கோவையில் 16-வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

மாதம்பட்டியில் 16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.


கோவை: மாதம்பட்டியில் 16-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). இவர் பழக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் வீடு பொள்ளாச்சி ஆனைமலை உள்ளதால் அவ்வப்போது ஆனை மலைக்கு வந்து செல்வது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு தினேஷ்குமார் வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16-வயது சிறுமிக்கும், தினேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆனைமலை காவல்துறை விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் காவல்துறை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரைக் கைது செய்தனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...