கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டு, சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (44), இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். கோவை சூலூரில் விருமாண்டி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செட் அமைத்துத் தங்கி இருந்து லாரி ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் லாரியில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்குமாருக்கும், விருமாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது விருமாண்டிக்கு ஆதரவாகத் திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி 22 என்ற வாலிபர் ராஜ் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (44), இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். கோவை சூலூரில் விருமாண்டி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செட் அமைத்துத் தங்கி இருந்து லாரி ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் லாரியில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்குமாருக்கும், விருமாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது விருமாண்டிக்கு ஆதரவாகத் திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி 22 என்ற வாலிபர் ராஜ் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்தனர்.