கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாக தாக்கிய வாலிபர் கைது

கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டு, சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே லாரி உரிமையாளரை சரமாரியாகத் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (44), இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். கோவை சூலூரில் விருமாண்டி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செட் அமைத்துத் தங்கி இருந்து லாரி ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் லாரியில் இருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்குமாருக்கும், விருமாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது விருமாண்டிக்கு ஆதரவாகத் திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி 22 என்ற வாலிபர் ராஜ் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்த சாரதியை கைது செய்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...