பொதுமக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவை: கோவை வால்பாறை அருகே காட்டு யானைகள் பள்ளி வகுப்பு அறையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்றிரவு வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அப்பகுதி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து வகுப்பறைகளில் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது.

இதனையடுத்து, தலைமை ஆசிரியர் அறையினுள் காட்டு யானை நுழைந்து மேசை, நாற்காலி, பாடப் புத்தகங்களை கிழித்து பொருட்களை சேதப்படுத்தியது.

காலையில் பள்ளி வளாகத்திற்கு வந்த ஆசிரியர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்றிரவு வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள் அப்பகுதி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து வகுப்பறைகளில் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது.
இதனையடுத்து, தலைமை ஆசிரியர் அறையினுள் காட்டு யானை நுழைந்து மேசை, நாற்காலி, பாடப் புத்தகங்களை கிழித்து பொருட்களை சேதப்படுத்தியது.
காலையில் பள்ளி வளாகத்திற்கு வந்த ஆசிரியர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.