சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவையில் தீக்குளித்து முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்கிற ராமசாமி (63). இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக வள்ளி (53) என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், ராமசாமிக்கு லேசான மனநிலை பாதிப்பு இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கடந்த இரண்டு வருடங்களாக எல்லோரிடமும் அவர் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்கிற ராமசாமி (63). இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக வள்ளி (53) என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், ராமசாமிக்கு லேசான மனநிலை பாதிப்பு இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கடந்த இரண்டு வருடங்களாக எல்லோரிடமும் அவர் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.