கோவை சிங்காநல்லூர் அருகே தீக்குளித்து முதியவர் பலி..!

சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவையில் தீக்குளித்து முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்கிற ராமசாமி (63). இவர் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக வள்ளி (53) என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், ராமசாமிக்கு லேசான மனநிலை பாதிப்பு இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கடந்த இரண்டு வருடங்களாக எல்லோரிடமும் அவர் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் தனியார் கல்லூரி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...