கோவை வந்தடைந்தது குடியரசு தின அலங்கார ஊர்தி...!

பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் இருக்கும் அலங்கார ஊர்தி கோவை வந்தடைந்தது. கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதியில் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: மத்திய அரசு நிராகரித்த தமிழக அலங்கார ஊர்தி, கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதியில் ஒய்யாரமாக ஊர்வலம் வந்தது.

குடியரசு தின விழா டெல்லி அணிவகுப்பில் தமிழக ஊர்திகளுக்கு சில காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டது.அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட ஊர்திகள் அணிவகுப்பு சென்னையில் நடைபெற்றது. மேலும் அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் வலம் வரும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் படி பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்கள் இருக்கும் அலங்கார ஊர்தி கோவை வந்தடைந்தது. கோவை மாவட்ட எல்லையான தெக்கலூர் பகுதியில் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங்கார ஊர்திக்கு மேளதாளங்கள் முழங்க மலர் தூவியும், மாலை அணிவித்தும் வரவேற்பளிக்கப்பட்டது.



வருவாய்க் கோட்டாட்சியர் இளங்கோ, மாவட்ட தகவல் தொடர்பு அதிகாரி செந்தில், சூலூர் வட்டாட்சியர் சகுந்தலா மணி, மண்டல துணை வட்டாட்சியர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் அலங்கார ஊர்திக்கு வரவேற்பளித்தனர்.



இந்த அலங்கார ஊர்தியில் பாரதியார், விஜயராகவாச்சாரி, சுப்பிரமணிய சிவா, சிதம்பரனார், சுதேசி கப்பல், வ.உ.சிதம்பரனார், சிறையில் செக்கிலுத்த காட்சிகளும், பாரதியாரின் சாதிகள் இல்லையடி பாப்பா என்றவசனமும் இடம்பெற்றுள்ளன. இதனைப் பொதுமக்கள் அனைவரும் வழி நெடுகிலும் கண்டு மகிழ்ந்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை கோவையிலிருந்து புறப்பட்டு திருச்சி சாலை மார்க்கமாகத் திருப்பூர் செல்ல உள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...