கோவை உள்ளாட்சி தேர்தல்: விதிமுறை மீறல் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் - மாநகராட்சி அறிவிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள், சந்தேகங்களுக்கு , கோவை மாநகராட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0422 - 2300132, தொடர்பு கொள்ளலாம் - மாநகராட்சி ஆணையர்


கோவை:

கோவை மாநகராட்சியில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது, "தேர்தல் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் அறைகள், அரங்குகள், வளாகத்துக்குள் நுழையும் போது அனைவரையும் தெர்மல் ஸ்கேனிங்குக்கு உட்படுத்த வேண்டும்.

அவ்வப்போது, சோப்பு, கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும்.

6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் அறைகள் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். வேட்பு மனு தாக்கலுக்கு வேட்பாளர்கள் வருகையின் போது 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்பு மனு செய்யும் போது, முதல் வேட்பாளர் வெளியே வந்த பிறகே, அடுத்த வேட்பாளர் நுழைய அனுமதிக்கப்படுவார். நிர்ணயிக்கப்படும், நேரத்துக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் வரும் அனைத்து வேட்பாளர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் நுழைபவர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை சமர்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள், சந்தேகங்களுக்கு , கோவை மாநகராட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0422 - 2300132, தொடர்பு கொள்ளலாம்", என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...