அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கோவை: அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அரியலூர் மாணவி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவர் மதமாற்றத்திற்குத் தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இச்சம்பவத்தைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியும் கருப்பு கொடி ஏந்தியும் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் அம்மாணவி தனது உறவினர் தன்னை சித்தாவதைச் செய்ததாகவும், பள்ளியில் பாடங்களை உடனடியாக எழுத சொல்லி தன்னை வற்புறுத்தியதால், தான் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறிய வீடியோ இன்று காலையிலிருந்து வைராலாகி பரவி வருகிறது. அதில் மதமாற்றம் குறித்த எவ்வித பதிவையும் அம்மாணவி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை பல்வேறு இந்து அமைப்புகள் மறுத்து வருகின்றனர்.
அரியலூர் மாணவி சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவர் மதமாற்றத்திற்குத் தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி கட்சியின் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இச்சம்பவத்தைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியும் கருப்பு கொடி ஏந்தியும் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் அம்மாணவி தனது உறவினர் தன்னை சித்தாவதைச் செய்ததாகவும், பள்ளியில் பாடங்களை உடனடியாக எழுத சொல்லி தன்னை வற்புறுத்தியதால், தான் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறிய வீடியோ இன்று காலையிலிருந்து வைராலாகி பரவி வருகிறது. அதில் மதமாற்றம் குறித்த எவ்வித பதிவையும் அம்மாணவி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இதனை பல்வேறு இந்து அமைப்புகள் மறுத்து வருகின்றனர்.