கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கழக தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். மலைவாழ் படி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கன்னிராஜ், ஐஎன்டியுசி தௌத்கான், ஏஐடியுசி சண்முகம் மற்றும் எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர்கள் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர்.

இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கழக தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"ஊதிய ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். மலைவாழ் படி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேளாங்கன்னிராஜ், ஐஎன்டியுசி தௌத்கான், ஏஐடியுசி சண்முகம் மற்றும் எச்எம்எஸ் தொழிற்சங்க தலைவர்கள் நோக்கங்கள் குறித்து உரையாற்றினர்.
இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.