கோவையில் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை: 2 பேர் காவல் நிலையத்தில் சரண்..!

இந்து முன்னணியில் இருந்து விலகிய பைனான்ஸ் அதிபர் கடந்த வாரம் திமுகவில் இணைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் பைனான்ஸ் அதிபரை வெட்டிக்கொன்ற 2 பேர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளனர்.



கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூரை சேர்ந்த சுந்தரம் மகன் சரவணன் (19). இவர் பைனான்ஸ் நடத்தி வந்தார்.



இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு அன்னூரில் கோவை ரோட்டில் மைல்கல் அருகே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்னர் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

போலீசார் விசாரணையில் சரணடைந்த இருவரில் ஒருவர், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (20). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருபவர். மற்றொருவர் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜராஜன் (22) என தெரியவந்தது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில் மூவரும் இந்து முன்னணியில் இருந்தனர். கொலையான சரவணன் அவர்களிடமிருந்து விலகி தனியாக பைனான்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்து முன்னணியிலும் இருந்து விலகிய சரவணன் கடந்த வாரம் திமுகவில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...