கோவையில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாநகர் பகுதிகளில் அரசியல் கட்சி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டு வ‌ருகின்ற‌ன.


கோவை: கோவை மாநகர் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் த‌ற்பொழுது அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் பிப்ர‌வ‌ரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் நேற்று மாலை அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

இதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் படம் அகற்றப்பட்டன, மேலும் அரசின் திட்டங்கள் சார்ந்த விளம்பரங்கள் மறைக்கப்பட்டது.



கோவை உக்கடம் டவுன்ஹால் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இது தவிர அங்கு எழுதப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் பெயிண்ட் கொண்டு அளிக்கப்பட்டது.



அத்துடன் அவினாசி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் விளம்பர பதாகைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...