கோவையில் அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாநகர் பகுதிகளில் அரசியல் கட்சி சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டு வ‌ருகின்ற‌ன.


கோவை: கோவை மாநகர் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் த‌ற்பொழுது அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் பிப்ர‌வ‌ரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் நேற்று மாலை அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டது.

இதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் படம் அகற்றப்பட்டன, மேலும் அரசின் திட்டங்கள் சார்ந்த விளம்பரங்கள் மறைக்கப்பட்டது.



கோவை உக்கடம் டவுன்ஹால் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இது தவிர அங்கு எழுதப்பட்டிருந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் பெயிண்ட் கொண்டு அளிக்கப்பட்டது.



அத்துடன் அவினாசி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் விளம்பர பதாகைகள் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...