நாட்டின் 73வது குடியரசு தினவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வினித் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் சார்பில் நாட்டின் 73வது குடியரசு தினவிழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வினித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, வானில் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது.
மாவட்ட, மாநகர பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் வீரதீர செயல்புரிந்த காவலர்கள் என 55 பேருக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், சிறப்பாக பணிபுரிந்த 68 காவலர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, 216 பயனாளிகளுக்கு ரூ.5.86 கோடி மதிப்பிலான வீட்டு மனை பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.