தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர்.
கோவை: நாட்டின் 73 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர்.
அதனை தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர்.
பின்னர், கோவை மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், காவலர்கள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வாரிய அலுவலர்கள் ஆகிய முன்கள பணியாளர்கள் 303 பேருக்கு சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டில் இருந்த படி குடியரசு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் முக நூலில் நேரலை ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.
வழக்கமாக குடியரசு தினத்தில் நடத்தப்படும், கிராம சபை கூட்டங்களும் இவ்வாண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.