73 வது குடியரசு தினவிழா: கோவை மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை..

தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர்.



கோவை: நாட்டின் 73 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர். 



அதனை தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் மூவர்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வெண்ணிற புறாக்களை பறக்கவிட்டனர். 



பின்னர், கோவை மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், காவலர்கள், அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் வழங்கல் வாரிய அலுவலர்கள் ஆகிய முன்கள பணியாளர்கள் 303 பேருக்கு சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீட்டில் இருந்த படி குடியரசு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் முக நூலில் நேரலை ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது.



வழக்கமாக குடியரசு தினத்தில் நடத்தப்படும், கிராம சபை கூட்டங்களும் இவ்வாண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...