கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்பள பேச்சுவார்த்தை நடத்தி எஸ்டேட் நிர்வாகமும், தொழிற்சங்க கூட்டமைப்பினரும் இந்த சம்பளத்தை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் 40 காசு சம்பளம் எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கண்டன உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 62 எஸ்டேட்கள் உள்ளன. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தற்போது 350 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை விலைவாசி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி எஸ்டேட் நிர்வாகமும், தொழிற்சங்க கூட்டமைப்பினரும் சம்பளப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசாங்கம் 425 ரூபாய் 40 காசு குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் என்று அறிவித்தது.

இதையடுத்து, அதை தற்போது எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், எஸ்டேட் நிர்வாகம் சில தொழிற்சங்க தலைவர்களும் இணைந்து எஸ்டேட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 425 ரூபாய் 40 காசு வழங்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறி தமிழக அரசு அறிவித்த 425 ரூபாய் 40 காசு குறைந்தபட்ச சம்பளத்தை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டுமென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் மதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், சிஐடியு தொழிற்சங்கம், தீரன் தொழிற்சங்கம், மனிதநேய தொழிற்சங்கம், புதிய தமிழகம் தொழிற்சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 62 எஸ்டேட்கள் உள்ளன. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக தற்போது 350 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை விலைவாசி அடிப்படையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி எஸ்டேட் நிர்வாகமும், தொழிற்சங்க கூட்டமைப்பினரும் சம்பளப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசாங்கம் 425 ரூபாய் 40 காசு குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும் என்று அறிவித்தது.
இதையடுத்து, அதை தற்போது எஸ்டேட் நிர்வாகம் வழங்காமல் இருப்பதாகவும், எஸ்டேட் நிர்வாகம் சில தொழிற்சங்க தலைவர்களும் இணைந்து எஸ்டேட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 425 ரூபாய் 40 காசு வழங்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறி தமிழக அரசு அறிவித்த 425 ரூபாய் 40 காசு குறைந்தபட்ச சம்பளத்தை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டுமென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் மதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், சிஐடியு தொழிற்சங்கம், தீரன் தொழிற்சங்கம், மனிதநேய தொழிற்சங்கம், புதிய தமிழகம் தொழிற்சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.