பாலக்காட்டில் முழு அடைப்பு-கோவையிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்


கேரள மாநிலம் பாலக்காட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கோவையிலிருந்து கேரளாவிற்கு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவில்லை.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பா.ஜ.க பிரமுகர் வீட்டின் மீது  பெட்ரோல் குண்டு வீசியதில்  வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை கண்டித்து பா.ஜ.க சார்பில் பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி அங்கு இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் துவங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் எல்லைப்பகுதியான வாளையாறில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து கேரள மாநில பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு எல்லைப்பகுதியான கோவை வழியாக நாள்தோறும் பால், முட்டை, இறைச்சி, காய்கறிகள் என ஏராளமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முக்கிய பாதையான பாலக்காட்டில் நடைபெற்று வரும் முழு அடைப்பு காரணமாக இந்த பொருட்கள் எல்லைப்பகுதியில் தேங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...