இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமீறியதாக ஒரே நாளில் ரூ.95,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.95 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.95 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.