கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமீறியதாக ஒரே நாளில் ரூ.95,200 அபராதம் விதிப்பு..!

இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமீறியதாக ஒரே நாளில் ரூ.95,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைபிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மக்கள் முக கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.95 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.57 ஆயிரத்து 600 மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ரூ.37 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...