பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
பச்சரிசி, கரும்பு, மிளகு, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு இதுவரை 94 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொங்கல் பரிசு விநியோகம் காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் வழங்க வேண்டிய அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் முடிந்து பின்னரும் இதுவரை வாங்காத பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை ஆவாரம்பாளையம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
கோவை மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
பச்சரிசி, கரும்பு, மிளகு, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு இதுவரை 94 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொங்கல் பரிசு விநியோகம் காரணமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் வழங்க வேண்டிய அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் முடிந்து பின்னரும் இதுவரை வாங்காத பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை ஆவாரம்பாளையம், பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.