தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.



மாணவியை மதம் மாற பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது தான் தற்கொலைக்குக் காரணம். இந்த உண்மையை காவல்துறை மற்றும் தமிழக அரசு மறைக்கப் பார்க்கிறது. எனவே இந்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



பின்னர் அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தஞ்சை கிறிஸ்தவப் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை இந்து மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரம். மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

ஆனால் மதமாற்றம் என்ற விஷயத்தை காவல்துறை தமிழக அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. இது குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் முயற்சியாகும், தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் இந்து மதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. கோயில் மீட்பு, மதமாற்றம் போன்ற பிரச்சினைகளில் இந்துக்களுக்கு எதிராகத் தமிழக அரசு செயல்படுகிறது.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...