பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3-பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் வழியாகச் செல்லும் சாலைகளைக் கடந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பதாகவும்,ஊரடங்கு நாட்களின்போது, அத்தியாவசிய பொருட்கள் என கூறி, சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசியைப் பதுக்கிக் கடத்துவதாகவும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
இந்நிலையில், நேற்று காலையில், நடுப்புணி அருகே சென்றாம்பாளையம் பாலம் அருகே, புட்செல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகக் கேரள பதிவு எண்கொண்ட சரக்கு வாகனத்தைநிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்தனர்.

சந்தேகமடைந்த போலீசார், சரக்கு வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில், சுமார் 50 கிலோ எடையில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதையறிந்தனர். விசாரணையில், பொள்ளாச்சியின் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுநர் ராஜாமன்சூர்அலி (38) மற்றும் பைக்கில் வந்த, மணிகண்டன் (35), சக்திவேல் (36) ஆகியோரையும் கைது செய்தனர். சரக்கு வாகனத்துடன் 2 டன்ரேஷன் அரிசியையும், பயன்படுத்தப்பட்ட மொபட்டையும்பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் வழியாகச் செல்லும் சாலைகளைக் கடந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பதாகவும்,ஊரடங்கு நாட்களின்போது, அத்தியாவசிய பொருட்கள் என கூறி, சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசியைப் பதுக்கிக் கடத்துவதாகவும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.
இந்நிலையில், நேற்று காலையில், நடுப்புணி அருகே சென்றாம்பாளையம் பாலம் அருகே, புட்செல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகக் கேரள பதிவு எண்கொண்ட சரக்கு வாகனத்தைநிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
சந்தேகமடைந்த போலீசார், சரக்கு வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில், சுமார் 50 கிலோ எடையில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதையறிந்தனர். விசாரணையில், பொள்ளாச்சியின் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுநர் ராஜாமன்சூர்அலி (38) மற்றும் பைக்கில் வந்த, மணிகண்டன் (35), சக்திவேல் (36) ஆகியோரையும் கைது செய்தனர். சரக்கு வாகனத்துடன் 2 டன்ரேஷன் அரிசியையும், பயன்படுத்தப்பட்ட மொபட்டையும்பறிமுதல் செய்தனர்.