2 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: அதிரடியாக பறிமுதல் செய்த பொள்ளாச்சி போலீஸ்!

பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3-பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்கள் வழியாகச் செல்லும் சாலைகளைக் கடந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பதாகவும்,ஊரடங்கு நாட்களின்போது, அத்தியாவசிய பொருட்கள் என கூறி, சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசியைப் பதுக்கிக் கடத்துவதாகவும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இந்நிலையில், நேற்று காலையில், நடுப்புணி அருகே சென்றாம்பாளையம் பாலம் அருகே, புட்செல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாகக் கேரள பதிவு எண்கொண்ட சரக்கு வாகனத்தைநிறுத்தி, ஓட்டுநரிடம் விசாரித்தனர்.



சந்தேகமடைந்த போலீசார், சரக்கு வாகனத்தைச் சோதனை செய்தனர். அதில், சுமார் 50 கிலோ எடையில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பதையறிந்தனர். விசாரணையில், பொள்ளாச்சியின் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓட்டுநர் ராஜாமன்சூர்அலி (38) மற்றும் பைக்கில் வந்த, மணிகண்டன் (35), சக்திவேல் (36) ஆகியோரையும் கைது செய்தனர். சரக்கு வாகனத்துடன் 2 டன்ரேஷன் அரிசியையும், பயன்படுத்தப்பட்ட மொபட்டையும்பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...