கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை விநியோகம் செய்து தலைமறைவாக இருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை விநியோகம் செய்து தலைமறைவாக இருந்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 12-ந் தேதி கிணத்துக்கடவு காமராஜர் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிணத்துக்கடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் சோதனையிட்டபோது அங்கு 133 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி வீட்டில் குட்கா புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் முக்கியக் குற்றவாளி அருண் குமரன் தலைமறைவாகி இருந்தார். அவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வந்தநிலையில் நேற்று ஈச்சனாரி அருகே பைபாஸ் சாலையில் ஒரு டீக்கடை அருகில் அருண் குமரன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவல்துறை அங்கு சென்று அருண் குமாரனைக் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் அருண் குமரன் சொந்த ஊர் தர்மபுரி அருகே உள்ள நல்லாம்பள்ளி கிராமமாகும். இவர் கோவை அருகே உள்ள சுந்தராபுரத்தில் தங்கியிருந்து பெங்களூரிலிருந்து காய்கறிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து கோவையில் காய்கறி கடைகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.
காய்கறி கொள்முதல் செய்யப் பெங்களூர் போகும் போது அங்கிருந்து குட்கா புகையிலை வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதிக்கு விநியோகம் செய்துள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 12-ந் தேதி கிணத்துக்கடவு காமராஜர் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிணத்துக்கடவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் சோதனையிட்டபோது அங்கு 133 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி வீட்டில் குட்கா புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் முக்கியக் குற்றவாளி அருண் குமரன் தலைமறைவாகி இருந்தார். அவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வந்தநிலையில் நேற்று ஈச்சனாரி அருகே பைபாஸ் சாலையில் ஒரு டீக்கடை அருகில் அருண் குமரன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவல்துறை அங்கு சென்று அருண் குமாரனைக் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் அருண் குமரன் சொந்த ஊர் தர்மபுரி அருகே உள்ள நல்லாம்பள்ளி கிராமமாகும். இவர் கோவை அருகே உள்ள சுந்தராபுரத்தில் தங்கியிருந்து பெங்களூரிலிருந்து காய்கறிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து கோவையில் காய்கறி கடைகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.
காய்கறி கொள்முதல் செய்யப் பெங்களூர் போகும் போது அங்கிருந்து குட்கா புகையிலை வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதிக்கு விநியோகம் செய்துள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.