தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 54-ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்குத் தலைமையாசிரியர்கள் மூலமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்களில் 29 ஆயிரத்து 425 மாணவர்கள், 34 ஆயிரத்து 748 மாணவியர் என 64 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பள்ளிகளிலேயே ‘கோ–வின்’ இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்குப் பதிவு செய்யத் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு ஒரு மருத்துவர், ஒரு சுகாதாரப் பணியாளர் என தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்குத் தலைமையாசிரியர்கள் மூலமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
அந்தந்த பள்ளிகளிலேயே ‘கோ–வின்’ இணையதளத்தின் வாயிலாக மாணவர்களுக்குப் பதிவு செய்யத் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு ஒரு மருத்துவர், ஒரு சுகாதாரப் பணியாளர் என தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்குத் தலைமையாசிரியர்கள் மூலமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.