தண்ணீரை பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்வதால் இது போன்ற இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் தண்ணீர் டேங்க் பழுதான நிலையில், லாரியில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடிக்கும் பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு குடிநீர் இணைப்பு இல்லாத பெரும்பாலான வார்டுகளுக்கு நகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
அந்தந்த வார்டுகளில் தண்ணீர் நிரப்ப 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நிரப்பப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு அமைதி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் சேமிப்பு பிளாஸ்டிக் டேங்குகள் உள்ளது.

ஆனால், இரண்டு டேங்குகளும் ஓட்டை விழுந்ததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக லாரிகளில் பொதுமக்கள் தண்ணீரை பிடித்து வருகின்றன. வீடுகள் தூரமாக இருப்பதால் பொதுமக்கள் நீண்ட தூரம் குடங்களில் தண்ணீர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், தண்ணீரைப் பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்வதால் இது போன்ற இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓட்டை விழுந்த தண்ணீர் தொட்டிகள் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் நோய் பரவலை கட்டுப்படுத்த உடனடியாக புதிய தண்ணீர் டேங்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு குடிநீர் இணைப்பு இல்லாத பெரும்பாலான வார்டுகளுக்கு நகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
அந்தந்த வார்டுகளில் தண்ணீர் நிரப்ப 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் நிரப்பப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு அமைதி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் சேமிப்பு பிளாஸ்டிக் டேங்குகள் உள்ளது.
ஆனால், இரண்டு டேங்குகளும் ஓட்டை விழுந்ததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக லாரிகளில் பொதுமக்கள் தண்ணீரை பிடித்து வருகின்றன. வீடுகள் தூரமாக இருப்பதால் பொதுமக்கள் நீண்ட தூரம் குடங்களில் தண்ணீர் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், தண்ணீரைப் பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்வதால் இது போன்ற இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓட்டை விழுந்த தண்ணீர் தொட்டிகள் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் நோய் பரவலை கட்டுப்படுத்த உடனடியாக புதிய தண்ணீர் டேங்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.