மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 30 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி காப்பீட்டு ஊழியர்கள் குற்றச்சாட்டு


மத்திய அரசு கடந்த 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால் இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி அமைப்பினர், பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு கொள்கையை கண்டித்து எல்ஐசி காப்பீட்டு ஊழியர்கள் கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலக வாளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பில் இது வரை சரியான தீர்வு கிடைக்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்கள், பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதல் பெட்ரோல் பங்க், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பழைய நோட்டுகள் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தது, ஆனால் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியது.

இதனால் எல்.ஐ.சி நிறுவனத்தில் உள்ள 30 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...