கோவையில் சாதி, மதம் மொழி வேறுபாடுகளை களைந்து சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பல்சமய நல்லுறவு இயக்கத்தார் மற்றும் திமுகவினர் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் நிகழ்வில் இந்துக் கோயில் அர்ச்சகர், இஸ்லாமிய ஹாஜி, தேவாலய பாதிரியார் மற்றும் அனைத்து மத பெண்கள், ஆண்கள், குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.



கோவை: தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



மதங்களைக் கடந்த தமிழ் இனத்தவர்களுக்கான இந்த பண்டிகையை, கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் வாழும் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் சமத்துவத்துடன் ஒன்றுகூடி இன்று சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.



பல்சமய நல்லுறவு இயக்கத்தார் மற்றும் திமுகவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்துக் கோயில் அர்ச்சகர், இஸ்லாமிய ஹாஜி, தேவாலய பாதிரியார் மற்றும் அனைத்து மத பெண்கள், ஆண்கள் குழந்தைகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இது குறித்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர், முகமது ரஃபிக் பேசுகையில், "வட மாநிலம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத மோதல் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. இந்த நிலையில், தமிழகம் திராவிடத்தை தாங்கி சமத்துவத்தை நிலைநாட்டி வருகிறது. தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் சமத்துவ பொங்கல், திராவிட மண் சமத்துவத்தை நிலைநாட்டுவதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

பல ஆண்டுகாலமாக இந்த பகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த நிகழ்வு தற்போது நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. சமத்துவ பொங்கல் வைத்து விவசாயிகளுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவித்தும், சாதி மதம் மொழி கடந்து சமத்துவத்தை நிலைநாட்டவும் இந்த நிகழ்வு இந்து, இஸ்லாம், கிறிஸ்துவர்கள் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...