வால்பாறையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 425.40-சம்பளத்தை வழங்க இறுதி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 425.40 சம்பளத்தை வழங்க இறுதி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொழிற்சங்க தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கடந்த ஆண்டு 30.07.2021 அன்று ஒரு வரைவு அறிக்கை மூலம் அடிப்படை சம்பளம் ரூபாய் 228 பஞ்ச படி ரூபாய் 197.40 என்று மொத்தம் 425.40 ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் வரைவு வெளியிடப்பட்டுக் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாணை வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.



ஆனால், தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை, குறைந்த பட்ச கூலிக்கு விரோதமாக இடைக்கால ஒப்பந்தம் என்று சில தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிகளுக்கு உறுதுணையாக இருப்பதைக் கண்டித்துக் கண்டித்தும் உடனடியாக காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு ஆணை வெளியிட வரைவு அறிக்கை வெளியிட 30.7.21 முதல் குறைந்தபட்ச சம்பளம் 425.40 உடன் சேர்த்து பஞ்சப்படி வழங்க வலியுறுத்தி இறுதி அரசாணை வெளியிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு குறைந்தபட்ச கூலி வழங்கத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி, வால்பாறையில் உள்ள மதிமுக, ஐஎன்டியூசி, புதிய தமிழகம், மனிதநேய தொழிற்சங்கம், சிஐடியு, சங்கம் கொங்குநாடு பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...