திருப்பூரில் கேஸ் சிலிண்டர் அடியில் பதுங்கிய விஷ பாம்பு

திருப்பூர் அருகே வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரில் பதுங்கிய விஷ பாம்பைத் தீயணைப்புத் துறையினர் போராடி பிடித்தனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு வந்ததால் அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டிலிருந்த சிலிண்டரில் பதுங்கிய விஷ பாம்பைத் தீயணைப்புத் துறையினர் போராடி பிடித்தனர்.

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஆர்.வி.இ நகர் பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக அப்பாஸ் என்பவர் தனது மனைவி பெனசீர் மற்றும் குழந்தைகள் அப்சான நிஷா, அப்சர் உடன் வசித்து வருகிறார். அப்பாஸ் மனைவி பெனசீர் இரவு உணவு தயார் செய்வதற்காகச் சமையலறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, திடீரென சமையல் அறையிலிருந்து சுமார் 3-அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதைக்கண்ட பெனசீர் உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்தவர்களை அழைக்கச் சென்றுள்ளார்.

அந்த இடைவெளியில் பாம்பு சமையலறை உள்ளே மறைந்து கொண்டது. பின்னர் பயத்தில் உறைந்த பெனசீர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியில் எடுத்து சோதனை செய்த போது சிலிண்டருக்கு அடியில் பாம்பு சுற்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி சீலிண்டர் அடிப்பாகத்தில் சுற்றி இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.

குடியிருப்பு பகுதியில் பாம்பு வந்ததால் அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...