கோவையில் 10.78-லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கோவையில் 10-லட்சத்து 78-ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10-லட்சத்து 78-ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் தமிழக அரசு பரிசு தொகுப்பை அறிவித்து உள்ளது.

அதில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி கோவை மாவட்டத்தில் 10-லட்சத்து 78-ஆயிரத்து 484-குடும்பங்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு 200-பேருக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ரேஷன் கடையில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க பரிசு தொகுப்பு வழங்கப்படும். நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்ட டோக்கன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அதில் அவரவர் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு வர வேண்டும். பொங்கல் பரிசை பெற்றுக்கொண்டதும், சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால், கோவை மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்து உள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...