திருப்பூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர்.
திருப்பூர்: தமிழக அரசு அறிவித்திருந்த 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்று திருப்பூரிலும் துவங்கியது.
ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரக்கூடிய சூழ்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
கொரோனா தொற்றின் வீரியத்தை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் திருப்பூரிலும் இத்திட்டம் துவங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை ஜெய்வாய்பாய் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரக்கூடிய சூழ்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
கொரோனா தொற்றின் வீரியத்தை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் திருப்பூரிலும் இத்திட்டம் துவங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை ஜெய்வாய்பாய் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.