செங்கல் சூளை இடங்களை சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்த போது, செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது.
கோவை: கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளை இடங்களை வீடியோ எடுத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் நேற்றைய தினம் செங்கல் சூளை இடங்களை சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்த நிலையில் அவர்களிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் சமூக ஆர்வலர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு திரண்டவர்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமிருந்தும் புகார்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரின் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆதரவாளர்கள் 7 பேர்(VKV சுந்தரராஜ், பரசுராம், கணேஷன், பிரபாகரன், மருதையன், ஜீவானந்தம், சுதபிரியன்) மீது 5 பிரிவுகள் (147, 323, 427, 506/2, 379) கீழும், செங்கல் சூளையினர் அளித்த புகாரின் பேரில் சமூக ஆர்வலர்கள் கணேஷன், மோகன், மருத்துவர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது (447, 294b, 506/2, 324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை தடாகம் பகுதியில் நேற்றைய தினம் செங்கல் சூளை இடங்களை சமூக ஆர்வலர்கள் நான்கு பேர் ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ எடுத்த நிலையில் அவர்களிடம் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் காவல்துறையினர் சமூக ஆர்வலர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு திரண்டவர்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமிருந்தும் புகார்கள் பெறப்பட்டது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரின் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஆதரவாளர்கள் 7 பேர்(VKV சுந்தரராஜ், பரசுராம், கணேஷன், பிரபாகரன், மருதையன், ஜீவானந்தம், சுதபிரியன்) மீது 5 பிரிவுகள் (147, 323, 427, 506/2, 379) கீழும், செங்கல் சூளையினர் அளித்த புகாரின் பேரில் சமூக ஆர்வலர்கள் கணேஷன், மோகன், மருத்துவர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது (447, 294b, 506/2, 324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.