கோவை மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் பெண் தூய்மை பணியாளரை அங்கிருந்தவர் ஃப்லாஸ்க்கை கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரங்கேகவுண்டர் வீதியில் ஜெயின் கோயில் அருகே தூய்மை பணியாளர் ஜோதியம்மாள் என்பவர் தூய்மை பணிசெய்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கிருந்தவர்களால் 80வது வார்டில் பணிபுரியும் ஜோதியம்மாள் என்பவர் தாக்கப்பட்டார். இதில் ரத்த காயத்துடன் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.