சம ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இதில், நிரந்தர ஊழியர்களை விட கூடுதலாக தாங்கள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல தங்களுக்கும் வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் என்ற விகிதத்தில் மாதம் 6000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும்  சென்னை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய அதிக அளவில் ஒப்பந்த தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டதாகவும் குறைந்த கூலியில் வேலை செய்யும் பணியாளர்கள் கவுரவமாக  நடத்தப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். 

மேலும், தொழிலாளர் சட்டவிதி 25 (5)அ -வின் படி நிரந்தர பணியாளர் செய்யும் அதே வேலையை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை மாநில அரசும் மாநகராட்சி நிர்வாகமும் அமல்படுத்த மறுத்து வருகிறது.

தொழிலாளர் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மாநகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆஜராகாமல் உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்பிரச்சனையில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் மாநகர ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...