கோவையில் பெட்டிக்கடையில் 207 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது..!

மேலும், கடையிலிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 207 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் பெட்டிக்கடையில் 207 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபரை கைது செய்தனர்.

கோவை மாநகர போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ள புகையிலை பொருள்கள் குட்கா பொருட்கள் லாட்டரி சீட்டுகள் உட்பட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், தொடர்ந்து கோவையில் பல்வேறு கோணங்களில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார் (33). இவர் கோவை பீளமேடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். இதில் அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து சந்தன் குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடையிலிருந்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 207 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...