மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அடையாள அட்டைகளை வழங்கினார்


கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

 

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பேசுகையில்; “கோயம்புத்தூர் வெள்ளளுர் குப்பை கிடங்கில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றார்கள். மேலும் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றார்கள், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதற்கட்டமாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தூய்மை பாரத இயக்கமும் இணைந்து மாநகராட்சியின் அமைப்பு சாரா குப்பை சேகரிக்கும் நபர்களை கணக்கெடுப்பு நடத்தி ஒருங்கிணைத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

 

மேலும் கோயம்புத்தூர் திடக்கழிவு மேலாண்மையின் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் 100 வார்டுகளுக்கும் செல்லும்  குப்பைகளை சேகரிக்கும் நபர்கள், உயர்ந்த மதிப்பான குப்பை பொருட்களை மட்டும் எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய வருமானத்தை உயர்த்தும் வகையில் குறைந்த மதிப்புள்ள குப்பை பொருட்களையும் சேகரித்து மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையிடம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

 

மேலும் அடுத்த கட்டமாக குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் அனைவருக்கும் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வு பயிற்சியும், மருத்துவ சிகிச்சை முகாமும் நடைபெற உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...