கோவை அரசு மருத்துவமனை அருகே தூய்மை பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரருக்கு, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கழிவுகளை அகற்றியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, தூய்மை பணியார்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர் கதையாகி வருவது தான் நிதர்சனம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன்படி, தனியார் ஒப்பந்ததாரர் பெரியசாமி என்பவருக்கு தூய்மை பணியாளர்களை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பேசிய தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், "மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்", என்றார்.
இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கழிவுகளை அகற்றியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, தூய்மை பணியார்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர் கதையாகி வருவது தான் நிதர்சனம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன்படி, தனியார் ஒப்பந்ததாரர் பெரியசாமி என்பவருக்கு தூய்மை பணியாளர்களை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பேசிய தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், "மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்", என்றார்.