குழந்தைகளிடம் உடலில் தொடக்கூடாத இடங்களைப் பட்டியலிட்டு அத்தகைய இடங்களில் தொட்டு பேசுபவர்கள் குறித்து உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைத்தனர்.
கோவை: கோவையில் அதிகரித்து வரும் குழந்தைகளின் மீதான வன்கொடுமை சம்பவங்களை கருத்தில் கொண்டு ஸ்ரீ கோபால் நாயுடு குழந்தைகள் பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் ரவிசாம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியைகள் குழந்தைகளுக்கு ஒருவர் நல்ல எண்ணத்தில் தொடுவது மற்றும் கெட்ட எண்ணத்தில் தொடுவது குறித்த வித்தியாசங்களை தத்ரூபமாக நடித்துக் காட்டி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, குழந்தைகளிடம் ஆசிரியைகள் முன்பின் தெரியாத நபர்களுடன் கைகுலுக்குதல், கைகளைத் தட்டி ஹைபை (Hifi) செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து குழந்தைகளிடம் உடலில் தொடக்கூடாத இடங்களை பட்டியலிட்டு அத்தகைய இடங்களில் தொட்டு பேசுபவர்கள் குறித்து உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைத்தனர்.
ஆசிரியைகள் நடித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மாணவ மாணவியரிடம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. பள்ளி நிர்வாக அதிகாரி கிரிஜா ரமேஷ், முதல்வர் வித்யா மற்றும் ஆசிரியைகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.