கோவை நவகரையில் யானைகள் இறந்ததை அடுத்து கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இது போன்று எந்த யானைகளும் உயிர் இழக்கக் கூடாது என்று மா- யாகம் நடத்தப்பட்டது.
கோவை: கோவை நவகரையில் யானைகள் இறந்ததை அடுத்து கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இது போன்று எந்த யானைகளும் உயிர் இழக்கக் கூடாது என்று மா- யாகம் நடத்தப்பட்டது.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வட மாநிலத்தவரான காஷ் மனோத் யானைகளுக்காகச் சிறப்பு யாகம் நடத்தினார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நவக்கரை பகுதியில் ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
எனவே, யானைகள் இறக்காமல் இருப்பதற்காகவும் விபத்துகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கவும் மா-யாகம் என்ற சிறப்பு யாகத்தை நடத்தினார்.
அந்த யாகத்தில் இதற்கு முன்பு ரயில்களால் உயிரிழந்த யானைகளின் புகைப்படங்களை வைத்து யாகம் நடத்தினார்.
மேலும், மத்திய அரசு உடனடியாக வனப்பகுதியில் செல்லும் ரயில்கள் குறைவான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன உயிரினங்கள் எந்த விபத்திலும் சிக்காமல் உயிர் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.