கோவையில் ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம்: மாரியம்மன் கோவிலில் மா- யாகம்.!!

கோவை நவகரையில் யானைகள் இறந்ததை அடுத்து கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இது போன்று எந்த யானைகளும் உயிர் இழக்கக் கூடாது என்று மா- யாகம் நடத்தப்பட்டது.



கோவை: கோவை நவகரையில் யானைகள் இறந்ததை அடுத்து கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இது போன்று எந்த யானைகளும் உயிர் இழக்கக் கூடாது என்று மா- யாகம் நடத்தப்பட்டது.



கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வட மாநிலத்தவரான காஷ் மனோத் யானைகளுக்காகச் சிறப்பு யாகம் நடத்தினார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நவக்கரை பகுதியில் ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் இறந்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

எனவே, யானைகள் இறக்காமல் இருப்பதற்காகவும் விபத்துகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கவும் மா-யாகம் என்ற சிறப்பு யாகத்தை நடத்தினார்.



அந்த யாகத்தில் இதற்கு முன்பு ரயில்களால் உயிரிழந்த யானைகளின் புகைப்படங்களை வைத்து யாகம் நடத்தினார்.



மேலும், மத்திய அரசு உடனடியாக வனப்பகுதியில் செல்லும் ரயில்கள் குறைவான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன உயிரினங்கள் எந்த விபத்திலும் சிக்காமல் உயிர் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...