அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை: கோவை கரும்பு கடையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-
கோவை உக்கடம் கரும்பு கடை செல்ல ராவுத்தர் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேல் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது எனறும், பல்வேறு குழந்தைகளை உருவாக்கிய அங்கன்வாடி மையம் தற்போது அழிவு நிலையில் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இந்த அங்கன்வாடி மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள் என்றும், தற்போது இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மேலும், அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள மரம் அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தின் மேல் சாய்ந்துள்ளதால் குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகளும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதாகவும், கடந்த பல நாட்களாகவே கோவையில் தொடர்மழை பெய்து வருகிறது.
இதனால் சேதமடைந்த கட்டிடத்தின் ஓடு விரிசல் வழியாக மழைநீர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே அதிகமாக தேங்கி நிற்கின்றது எனவும், அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் அனைத்தும் விரிசல் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு வாழும் பொது மக்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினரிடம் பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கோவை கரும்பு கடை ராவுத்தர் வீதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக ஆய்வு செய்து சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக புதுப்பித்து, அங்கு பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-
கோவை உக்கடம் கரும்பு கடை செல்ல ராவுத்தர் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேல் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது எனறும், பல்வேறு குழந்தைகளை உருவாக்கிய அங்கன்வாடி மையம் தற்போது அழிவு நிலையில் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இந்த அங்கன்வாடி மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள் என்றும், தற்போது இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மேலும், அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள மரம் அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தின் மேல் சாய்ந்துள்ளதால் குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகளும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதாகவும், கடந்த பல நாட்களாகவே கோவையில் தொடர்மழை பெய்து வருகிறது.
இதனால் சேதமடைந்த கட்டிடத்தின் ஓடு விரிசல் வழியாக மழைநீர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே அதிகமாக தேங்கி நிற்கின்றது எனவும், அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் அனைத்தும் விரிசல் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு வாழும் பொது மக்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினரிடம் பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கோவை கரும்பு கடை ராவுத்தர் வீதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக ஆய்வு செய்து சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக புதுப்பித்து, அங்கு பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.