கோவை கரும்பு கடையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பாதுகாக்க வேண்டும் - இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை..!

அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை கரும்பு கடையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

கோவை உக்கடம் கரும்பு கடை செல்ல ராவுத்தர் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேல் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது எனறும், பல்வேறு குழந்தைகளை உருவாக்கிய அங்கன்வாடி மையம் தற்போது அழிவு நிலையில் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இந்த அங்கன்வாடி மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள் என்றும், தற்போது இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மேலும், அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள மரம் அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தின் மேல் சாய்ந்துள்ளதால் குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகளும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளதாகவும், கடந்த பல நாட்களாகவே கோவையில் தொடர்மழை பெய்து வருகிறது.

இதனால் சேதமடைந்த கட்டிடத்தின் ஓடு விரிசல் வழியாக மழைநீர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே அதிகமாக தேங்கி நிற்கின்றது எனவும், அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் அனைத்தும் விரிசல் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அங்கு வாழும் பொது மக்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினரிடம் பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், உடனடியாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கோவை கரும்பு கடை ராவுத்தர் வீதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை உடனடியாக ஆய்வு செய்து சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக புதுப்பித்து, அங்கு பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...